
புதுடெல்லி: “இந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரியாக இருக்க முடியாது என்று நான் மனதார நம்புகிறேன். இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன். வரும் நாட்களில் அனைத்து இந்திய மொழிகளையும், குறிப்பாக அனைத்து அலுவல் மொழிகளையும் வளப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற அலுவல் மொழித் துறையின் பொன்விழா கொண்டாட்டங்களில் உரையாற்றிய அமித் ஷா, “இன்று, இந்த பிரம்மாண்டமான மண்டபத்தில், நமது அலுவல் மொழியை விரும்பும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த குறிப்பிடத்தக்க சந்தர்ப்பத்தில், நாடு முழுவதும் உள்ள இந்தி மற்றும் இந்திய மொழிகளைப் போற்றும் அனைவருக்கும், அவர்கள் எங்கிருந்தாலும், வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.