• June 26, 2025
  • NewsEditor
  • 0

‘ஊட்டி கொடைக்கானல் எதுக்குங்க, எங்க ஊரை வந்து பாருங்க, திரும்பிப் போக உங்களூக்கு மனசே வராது’ என உள்ளூர்க்கார யூ டியூபர் ஒருவர் வீடியோ வெளியிட, ஓவர் நைட்டில் கூகுள் ஸ்தம்பிக்கும் அளவு ஃபேமஸாகி விட்டது தமிழ்நாட்டின் குக்கிராமமான `கூமாப்பட்டி’.

விருதுநகர் மாவட்டம்னாலே கந்தக பூமின்னுதானே கேள்விப்பட்டிருப்போம், அங்க இப்படி ஒரு ஊரா’ எனப் பலரும், ஒரு எட்டு பார்த்து வரலாமென கிளம்ப ஆயத்தமாக, ‘யாரும் இங்க வரவேண்டாம், ஏன்னா, சுற்றுச் சூழல் பாதுகாப்பு கருதி கட்டுப்பாடுகள் அதிகம்’ என அறிவித்துள்ளது வனத்துறை.

இந்தச் சூழலில் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த நடிகர் தினேஷ் கோபால்சாமியிடம் பேசினோம்.

கூமாபட்டி

”ஊர்ல படிச்சிட்டிருந்தப்ப முதல் முறையா அந்த ஊருக்குப் போனது எனக்கு இன்னைக்கும் பசுமையா ஞாபகமிருக்கு. பள்ளிக் கூடத்துல இருந்து டூர் கூட்டிட்டுப் போனாங்க. ஒரு நாள் டூர்தான். பிளவக்கல் டேம்தான் நாங்க சுத்திப் பார்த்த இடம். இது நான் ட்ரவுசர் போட்டுட்டு திரிஞ்ச காலம். சொல்லப் போனா நான் டூர்னு போன முதல் இடம். என்னுடைய முதல் டூரிஸ்ட் ஸ்பாட் இதுதான்.

கொஞ்சம் பெரிய பையனா வளர்ந்ததும் ஃப்ரண்ட்ஸ் சேர்ந்து பைக் எடுத்துட்டுக் கிளம்பிடுவோம். இன்னைக்கு அந்த யூ டியூபர் தம்பி செய்த வேலையில் கூமாப்பட்டி பிரபலமாகி இருக்கு. ஆனா இத மாதிரி இன்னும் பல ஊர் இருக்கு அங்க.

வத்ராயிருப்பு, செண்பகத்தோப்பு, தாணிப்பாறை, சதுரகிரி, கான்சாபுரம்னு இந்த இடங்கள் எல்லாமே செழிப்பான கண்ணுக்குக் குளிர்ச்சியான பகுதிகள்தான்.

‘பிக்பாஸ்’ தினேஷ்

விருதுநகர் மாவட்டத்துல சாத்தூர். சிவகாசியை மட்டுமே வச்சு கந்தக பூமின்னு முடிவுக்கு வந்துடுறாங்க. ஆனா நான் குறிப்பிட்ட இந்தப் பகுதிகள்லாம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரம். அதனால‌ தென்மேற்குப் பருவ காலம் தொடங்கிடுச்சுன்னா இங்க ஜில் கிளைமேட்தான்.

மலை மேல இருக்கிற மூலிகைகளைத் தழுவி வர்ற‌ தண்ணீர்ங்கிறதால அந்த தம்பி சொன்னது நிஜம்தான் சர்பத் போலத்தான் இருக்கும்.

ஊர்க்காரங்கிறதுக்காக இதைச் சொல்லலை. தவிர உடலுக்கும் நல்லது . அதேபோலதான் இந்தப் பகுதிகள்ல நிறைய தோப்புகளூம் இருக்கு. இங்க கிடைக்கிற பதநீர், நுங்கு கூட மத்த இடங்களை விட சுவையானதாக் இருக்கும்.

நான் கொரோனா காலத்துலதான் சீரியல் ஷூட்டிங் எதுவுமில்லாம ஊர்ல போய் தங்கியிருந்தப்ப கூமாப்பட்டி, வத்ராயிருப்புல அதிக நாள் தங்கியிருந்தேன். நண்பருடைய தோப்பு அங்க இருக்கு.

பிளவக்கல் அணை

மத்தபடி ஊருக்குப் போகனும்னு நினைச்சா கிளம்பிப் போயிட்டு வருவேன். கடைசியா போன வருஷத்துல ஒரு நாள் போயிட்டு வந்தேன்” என்ற தினேஷிடம், வனத்துறை கெடுபிடிகள் குறித்தும் கேட்டோம்.

”சதுரரகிரி கிரிவலம் முன்னாடி இந்த அளவுக்குக் கிடையாது. பக்தர்கள் அதிகம் வந்து போக ஆரம்பிச்சதுல இருந்தே வனத்துறைக் கண்காணிப்பும் வந்திடுச்சு. சுற்றுச் சூழலுக்குப் பிரச்னை வரக்கூடாதுனு அவங்க நினைக்கிறாங்க. அதுவும் நல்லதுக்குதானே’ என்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *