• June 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்யக்கோரி அந்நாட்டு கைதி தாக்கல் செய்த மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், இலங்கையைச் சேர்ந்த சுஜாந்தன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “குற்ற வழக்கில் கடந்த 2020-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட நான் புழல் சிறையில் அடுக்கப்பட்டுள்ளேன். புழல் சிறையில் சுகாதாரமற்ற உணவு வழங்கப்படுகிறது. அந்த உணவு எனது உடலுக்கு ஒத்துழைக்கவில்லை. எனது கைது குறித்து இலங்கை தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கவில்லை. எனவே, இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்ய மத்திய,மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கோரியிருந்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *