
கடந்த மார்ச் மாதம் நடந்த பிறந்தநாள் விழாவின்போது, தனது கேர்ள் ஃபிரண்டை உலகுக்கு அறிமுகப்படுத்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார் ஆமிர் கான்.
60 வயதிலும் ஒரு காதலைக் கண்டடைய தனது மனநல சிகிச்சைகள் உதவியதாக வெளிப்படையாகப் பேசியுள்ளார் ஆமிர் கான்.
தெரபி தன்னை உறுதியாக உணர்ச்சி ரீதியிலான சமநிலையுடன் வைத்திருந்தாலேயே, கௌரி ஸ்ப்ராடுடனான அவரது பிணைப்பு ஆரோக்கியமானதாகவும், அமைதியானதாகவும் வளர்ந்ததாக சமீபத்திய உரையாடலில் கூறியுள்ளார்.
தெரபி
ஆமிர் கான் கடந்த 4 ஆண்டுகளாக தெரபி சந்திப்புகளுக்குச் சென்றுவருவதாகவும், தெரபி மூலம் தனிமனிதராக அவர் அடைந்த வளர்ச்சி, கௌரியுடனான உறவு சிறப்பானதாக இருக்க உதவியதாகவும் கூறியுள்ளார்.
அவரது தனிப்பட்ட வாழ்க்கைத் தேர்வுகளில் தெரபியின் தாக்கம் பற்றி பேசிய அவர், “ஒரு துணையைத் தேர்ந்தெடுப்பது போன்ற அடிப்படையான ஒன்றை எடுத்துக்கொள்வோம். நான்கு ஆண்டு தெரபிக்கு பிறகு இப்போது ரெட் ஃப்ளாகுகள் ஒரு மைல் தூரத்துக்கு அப்பால் இருந்தால்கூட என்னால் கண்டுபிடிக்க முடிகிறது” எனக் கூறியுள்ளார்.

“கௌரி இப்போது முற்றிலும் வேறொரு ஆமிரைப் பார்க்கிறார். நன்கு குணமடைந்த ஒருவன். கொஞ்சம் நிம்மதியாக, கொஞ்சம் மேம்பட்டவனாக இருக்கிறேன் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார் ஆமிர்.
முன்னாள் மனைவிகளுக்கு நன்றி!
மேலும் ஆமிர் கான் தனது முன்னாள் மனைவிகள் ரீமா தத்தா மற்றும் கிரண் ராவ் பற்றி நன்றியுணர்வுடன் பேசியுள்ளார். அவர்களது திருமண உறவு முறிந்தபோதும் அவர்கள் ஊக்கத்துக்கும் அரவணைப்புக்கும் ஆதாரமாக விளங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் ஒருவர் மற்றொருவர் மீதான வியப்பும், பரஸ்பர மரியாதையும் பிரிவுக்குப் பிறகும் நெருக்கமான அர்த்தமுள்ள உறவு தொடர அனுமதித்ததாகக் கூறியுள்ளார்.
இந்த உறவுகள் தனித்துவமானது என ஒப்புக்கொண்ட அவர், இரு உறவிலும் கசப்போ, வெறுப்போ இல்லை எனக் கூறியுள்ளார்.