
ஜம்மு: நோயாளியின் உறவினரிடம் திருடிய குற்றச்சாட்டின் கீழ் இளைஞரின் சட்டையை கழற்றி போலீஸார் ஊர்வலமாக அழைத்து சென்றனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் உரி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த இளைஞர் இஷ்ரக் அகமது. (24). இவர் ஜம்முவின் காசிம் நகரில் தங்கியுள்ளார். ஜம்மு அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவரின் உறவினரிடம் கடந்த செவ்வாய்க்கிழமை இவர் திருட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.