• June 26, 2025
  • NewsEditor
  • 0

விழுப்புரம்: “கருணாநிதி தன் இறுதி மூச்சு வரை திமுக தலைவராக இருந்தார். அப்போது, தலைவர் பதவிக்காக ஸ்டாலின் முணுமுணுக்கவில்லை. ஸ்டாலின் போல் அன்புமணியும் அமைதியாக இருக்க வேண்டும்.” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் பாமக தலைவர் ராமதாஸ் இன்று (ஜூன் 26) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கலைஞர் தன் இறுதி மூச்சுவரை திமுக தலைவராக இருந்தார். அதேபாணியில் என் இறுதி மூச்சுவரை பாமகவுக்கு நானே தலைவராக இருப்பேன். கருணாநிதி தலைவராக இருந்தபோது ஸ்டாலின் அப்பதவிக்காக எப்போதும் முணுமுணுக்கவில்லை. ஸ்டாலின் போல் அன்புமணியும் அமைதியாக இருக்க வேண்டும். என் காலம் முடியும் வரை அன்புமணி பாமகவின் செயல் தலைவராக இருக்க வேண்டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *