
பெங்களூரு: மாம்பழ விவசாயிகளின் துயரத்துக்கு தீர்வு காணக் கோரி மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ்சிங் சவுகானுக்கு திண்டுக்கல் எம்.பி. ஆர்.சச்சிதானந்தம் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் குறிப்பாக கிருஷ்ணகிரி, சேலம், திண்டுக்கல் மாவட்டங்களில் மாம்பழ சாகுபடி அதிகம் நடக்கிறது. பாரம்பரிய மாம்பழ விவசாயிகள் கடந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைத்தபோது டன் ஒன்றுக்கு ரூ.18,000 அளவுக்கு கூடுதல் விலை பெற்றனர். ஆனால், தற்போது மிகக் குறைந்த மகசூல் கிடைத்திருக்கும் நிலையில், கொள்முதல் விலையாக டன் ஒன்றுக்கு ரூ.4,000 மட்டுமே கிடைக்கிறது.