
சென்னை: போதைப் பொருள் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கி கவுரவிக்க உள்ளார்.
மாநிலத்தில் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை ஒழிப்பதில் சிறந்து விளங்கிய காவல் துறை அதிகாரிகளுக்கு ‘தமிழக முதல்வரின் காவல் பதக்கம்’ கடந்த 2023-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பதக்கங்களின் எண்ணிக்கை 5-ல் இருந்து 15 ஆக உயர்த்தப்படும் என கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.