• June 26, 2025
  • NewsEditor
  • 0

பெதுல்: மத்திய பிரதேச மாநிலம் பெதுலைச் சேர்ந்தவர் மங்காராம். இவர் கடந்த 1983-ம் ஆண்டு போஸ்ட்மாஸ்டராக வேலைபார்த்தபோது தனது கிளைக்கு வந்த ஒரு வாடிக்கையாளரின் டெபாசிட் தொகை ரூ.3,596-ஐ பதிவேட்டில் பதிவு செய்ய மறந்துவிட்டார். ஆனால் அந்த தொகையை முறைப்படி அரசு கருவூலத்தில் செலுத்தி வாடிக்கையாளரின் பாஸ்புக்கிலும் வரவு வைக்கப்பட்டுவிட்டது.

மங்காராம் செய்த செயலில் எந்தவொரு நிதி முறைகேடும் இல்லாத போதிலும் அந்தப் பிழை குற்றவியல் மோசடியாக கருதி கடந்த 1993-ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் மங்காராமுக்கு ஐபிசி 409 பிரிவின் கீழ் சிறிய தண்டனையாக கோர்ட் கலையும் வரை நீதிமன்றத்திலேயே நிற்க வைத்ததுடன் ரூ.3,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *