• June 26, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2 நாள் மாநாடு சீனாவின் கிழக்கு ஷான்டாங் மாகாணம் குவிங்டாவ் நகரில் நேற்று தொடங்கியது.

இந்த அமைப்புக்கு தற்போது தலைமை வகிக்கும் சீனா, இந்த மாநாட்டை நடத்துகிறது. இதில் பங்கேற்பதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று சீனா புறப்பட்டுச் சென்றார். ஏற்கெனவை சீனா சென்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் வாங் இ மற்றும் துணை அதிபர் ஹான் ஜெங் ஆகியோரை சந்தித்துப் பேசினார். மேலும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாட்டிலும் தோவல் பங்கேற்க உள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *