• June 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: திமுக அரசின் அவலங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நேற்றும் தொடர்ந்தது.

இதன்படி காலையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளும் பிற்பகலில் திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *