
சென்னை: தேர்தல் ஆதாயம் கருதி பாஜகவுக்கு அதிமுக துணைபோவதாக விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்தி, சம்ஸ்கிருதத்தை தேசிய அளவில் வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற நாளில் இருந்து திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். கூடுதல் நிதி ஒதுக்கி சம்ஸ்கிருதத்தை மேம்படுத்துவதில் அக்கறை காட்டும் அவர்கள் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளை பொருட்படுத்துவது இல்லை.