
மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 20,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று மாலை 13,332 கனஅடியாக நீர்வரத்து இருந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 18,000 கனஅடியிலிருந்து 20,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் நேற்று 112.71 அடியாகவும், நீர் இருப்பு 82.31 டிஎம்சியாகவும் இருந்தது.