
பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் தமிழகத்துக்கு விநாடிக்கு 43,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தலைக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி, மைசூரு உள்ளிட்ட இடங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பாகமண்டலா, திரிவேணி சங்கமம் ஆகிய இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
குடகு மாவட்டத்தில் தொடரும் கனமழையால் ஹாரங்கி, ஹேமாவதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இரு அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணைகளில் இருந்து விநாடிக்கு 20,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.