
சென்னை: தமிழர்களையும், தமிழ்நாட்டையும் தொடர்ந்து புறக்கணித்தும், வஞ்சித்தும் வரும் பாஜக ஒன்றிய அரசு, மாநில உரிமைகளுக்கும், மக்கள் நலனுக்கும் போராடிவரும் பொதுமக்களின் கவனத்தை, மதரீதியாக திசைதிருப்பி தேர்தல் ஆதாயம் தேடுகிறது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “பாஜக ஒன்றிய அரசு, அதிகாரத்தில் அமர்ந்த ஆரம்ப நாளிலிருந்து இந்தி, சமஸ்கிருத மொழிகளை தமிழ்நாட்டில் திணிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.