• June 25, 2025
  • NewsEditor
  • 0

பி.எஃப் – ஆத்திர அவசரம் தொடங்கி ஓய்வுக்காலம் வரை பெரும்பாலான மக்களுக்கு கைக்கொடுக்கும் ஒன்று.

ஓய்வுக்காலம் தவிர, எப்போது இந்தத் தொகையை எடுப்பதாக இருந்தாலும் சரி, அதற்கென சில நிபந்தனைகளும், செக்குகளும் உண்டு.

தேவைப்படுபோதெல்லாம், அவ்வளவு எளிதாக எடுத்துவிட முடியாது. கல்வி, கல்யாணம், வீடு கட்டுதல், மருத்துவ செலவு போன்றவைகளுக்கு மட்டும் தான் இந்தப் பணத்தை எடுக்க முடியும்.

பி.எஃப்

இதுவரை, மேனுவலாக எங்கேயும் போய் அலைந்துகொண்டிருக்காமல், எந்தக் கேள்வியும் இன்றி ரூ.1 லட்சம் வரை எடுத்துகொள்வதாக இருந்தது. இந்த லிமிட்டை கொஞ்சம் (கொஞ்சம் அல்ல)… கொஞ்சம் அதிகமாகவே உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.

இனி பி.எஃப் கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் வரை எளிதாக எடுத்துக்கொள்ளலாம். இதற்காக எந்த ஆபீசுக்கும் நேரில் செல்ல வேண்டியதில்லை.

ஆன்லைனில் விண்ணப்பித்தால் மட்டும் போதும். இந்த ரூ.5 லட்ச பணம் எடுப்பதற்கும் இ.பி.எஃப்.ஓவில் இருந்து எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படாது.

நீங்கள் விண்ணப்பித்த மூன்று நாள்களுக்குள் உங்கள் கையில் உங்களுக்கு தேவையான பணம் வந்துவிடும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *