• June 25, 2025
  • NewsEditor
  • 0

நேற்று (ஜூன் 24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார் சீமான். அப்போது ராப் பாடகர் வேடனுக்கு தரப்படும் நெருக்கடிகள் குறித்து சீமானிடம் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த சீமான், “ நாங்கள் வலி தாங்கிய மக்கள். அந்த வலியின் மகன்தான் வேடன். வேடன் என்றாலே வலி தாங்கியவன் என்தான் பொருள். இந்த மண்ணில் சிலவற்றை பேசி எண்ணற்ற வழக்குகள், கைது, அடக்குமுறை எல்லாவற்றையும் சந்தித்திருக்கிறேன்.

பாடகர் வேடன்

எனக்கு பின்பு வந்த இந்த தம்பி அந்த நிலத்தில் வலியின் மொழியாகக் கதறி பாடுகிறார். அதற்கு உலகமெங்கும் இருக்கும் தமிழர்கள் ஒவ்வொருவரும் தன் வீட்டு மகனாக நேசிக்கிறார்கள். வேடன் என்பவன் தனி மனிதன் அல்ல. வலியின் குரல்.

அவரின் குரலுக்கு எவ்வளவு மரியாதையை இருக்கிறது என்பது அவருக்கான கூட்டம் ஆர்ப்பரித்து இருப்பதைப் பார்க்கும்போது தெரியும்.  அவனுடைய வலியோடு எத்தனை கோடி மக்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும்” என்று வேடன் குறித்து பேசியிருக்கிறார். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *