• June 25, 2025
  • NewsEditor
  • 0

1975-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி, இந்தியாவில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அவசர நிலை கொண்டு வரப்பட்டது. இன்றோடு, 50 ஆண்டுகள் ஆகின்றன.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது…

“அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டப்போது, நான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இளம் பிரசாரகராக இருந்தேன். அவசர நிலை எதிர்ப்பு எனக்குப் பாடமாக இருந்தது.

அவசர நிலை

நமது ஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இது மீண்டும் உறுதிப்படுத்தியது. அதே நேரம், பல்வேறு அரசியல் பிரிவுகளில் இருக்கும் பல பேரிடம் இருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டேன்.

BlueKraft Digital Foundation – இதன் சில அனுபவங்களைப் புத்தகமாகத் தொகுத்து உள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவசர நிலை எதிர்ப்பு இயக்கத்தின் முக்கிய தலைவரான ஸ்ரீ எச்.டி. தேவகவுடா ஜி இந்தப் புத்தகத்தின் முன்னுரையை அவரே எழுதியுள்ளார்” என்று ஒரு புத்தகம் குறித்துக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த பதிவில்…

“‘தி எமர்ஜென்சி டைரீஸ்’ – இது எமர்ஜென்சி ஆண்டுகளில் எனது பயணத்தைக் குறிக்கிறது. இது அன்றைய காலகட்டத்தின் நினைவுகளைக் கொண்டு வருகிறது.

இருண்ட எமர்ஜென்சி காலகட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அப்போதைய காலம் குறித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1975 – 1977 அவமானக் காலகட்டம் குறித்து இளைஞர்களிடன் நான் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்” என்றும் பதிவிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *