
சென்னை: சென்னை, புறநகரில் இயக்கப்படும் மின்சார ரயில்களின் பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் தினமும் 12 லட்சம் பேர் ரயிலில் பயணிக்கின்றனர். இதில் சுமார் 8.6 லட்சம் பயணிகள் புறநகர் மின்சார ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். இதனால் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 9 பெட்டிகள் கொண்ட புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் 12 பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன.