• June 25, 2025
  • NewsEditor
  • 0

ஆளும் கட்சியாக இருந்தாலும் அடிமட்ட திமுக-வினருக்கு ஆயிரம் மனக்குறைகள் இருக்கின்றன. அதையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் கட்சி நிர்வாகிகளை சட்டமன்ற தொகுதி வாரியாக சந்தித்து வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். ஆனால், இந்தச் சந்திப்புகளில் ஆர்வமாக பங்கெடுக்கும் உடன்பிறப்புகள், தங்களது மனக்குமுறலை கொட்டி ஆறுதல் தேட முடியாமல் பேருக்கு வந்து போய்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இதற்கு முன்​பும் இது​போன்ற சந்​திப்​பு​களை நடத்தி இருக்​கி​றார் ஸ்டா​லின். அப்​போதெல்​லாம், மாவட்​டச் செய​லா​ளர்​கள், உள்​ளிட்​டோர் மீது கீழ்​மட்ட நிர்​வாகி​கள் ஏராள​மான குற்​றச்​சாட்​டு​களைக் கொட்டி இருக்​கி​றார்​கள். அதற்​கெல்​லாம் எந்த விடியலும் ஏற்​பட​வில்​லை. மாறாக, சில இடங்​களில் குறை​களைச் சொன்​ன​வர்​களே குற்​ற​வாளி​களாக சித்​தரிக்​கப்​பட்​டார்​கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *