• June 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: புண்ணியம் கிடைக்கும் என நான் திருநீறை பூசிக் கொள்ளவில்லை. அவமதிக்க வேண்டும் என்றும் நான் அழிக்கவில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் திருமாவளவன் பேசியதாவது: “கோயிலுக்குச் செல்லும்போது அங்கே என் தலையில் ஒரு தொப்பி வைக்கிறார்கள். அதை எடுக்காமல் தலையிலேயே வைத்திருக்க முடியுமா? அடுத்த ஒரு நிமிடத்தில் அதை எடுத்து விடலாம். அதை வைப்பவர்களுக்கும் கூட நாம் எடுத்து விடுவோம் என்று தெரியும். அது ஒரு அடையாளம். அதே போல பூசாரி என் நெற்றியில் திருநீறு பூசினார். அவருடைய உணர்வை நான் மதிக்கிறேன். அவருக்கு நான் நன்றி சொன்னேன். அதை கொஞ்ச நேரம்தானே வைத்திருக்க முடியும். புண்ணியம் கிடைக்கும் என நான் அதை பூசிக் கொள்ளவில்லை. அவமதிக்க வேண்டும் என்றும் நான் அதை அழிக்கவில்லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *