
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் ரூ.9.68 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கை வசதியுடன் கூடிய நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனை கட்டும் பணிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் சார்பில் சேப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சிஐடி குடியிருப்பு முதல் தெருவில், 50 ஆயிரம் பேர் பயன்பெறும் விதமாக ரூ.3.01 கோடியில் 6.25 எம்எல்டி செயல்திறன் கொண்ட வாயு கட்டுப்பாட்டு அமைப்புடன் கூடிய சாலையோர கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.