• June 24, 2025
  • NewsEditor
  • 0

மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையையும், அதில் இருக்கும் மும்மொழிக் கொள்கையும் தமிழ்நாட்டில் பெரும் விவாதப்பொருளாகியிருந்தது.

கடந்த நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் மும்மொழிக் கொள்கை மற்றும் இந்தித் திணிப்புக்கு எதிராகக் கடும் விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும், தேசியக் கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் பி.எம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய ரூ. 2,000 கோடி நிதியை மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் வழங்க முடியாது என்று பேசியது சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்தி திணிப்பு

இருப்பினும் தேசியக் கல்விக் கொள்கையையும், மும்மொழிக் கொள்கையையும் நாடுமுழுவதும் கொண்டு வந்தே தீருவோம் என்று பா.ஜ.க தீவிரமாக இருந்தது வருகிறது.

பா.ஜ.க தலைவர்களும், அமைச்சர்களும் மும்மொழிக் கொள்கை, இந்தி கற்றுக் கொள்வதற்கு ஆதரவாகத் தொடர்ந்து பரப்புரை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் கலாசாரா அமைச்சரும், பா.ஜ.க-வின் மும்பை மும்பை பிரிவின் தலைவராகவும் இருந்த ஆஷிஷ் ஷெலர், மகாராஷ்டிரா பள்ளிகளில் மராத்தி மட்டுமே கட்டாயம், இந்தி கட்டாயமாக இருக்கக் கூடாது என்று பேசியிருக்கிறார்.

மகாராஷ்டிரா பாஜக அமைச்சர் ஆஷிஷ் ஷெலர்
மகாராஷ்டிரா பாஜக அமைச்சர் ஆஷிஷ் ஷெலர்

இதுகுறித்துப் பேசியிருக்கும் அவர், “5 முதல் 8 ஆம் வகுப்பு வரை இந்தி கற்பிக்க வேண்டும் என்ற முந்தைய கட்டாயத்தை எங்கள் அரசாங்கம் நீக்கியுள்ளது.

அதற்குப் பதிலாக, பல மொழிகளுடன் சேர்ந்து இந்தி மொழியை ஒரு விருப்பத் தேர்வாக வேண்டுமானால் கற்றுக்கொள்ளலாம் என்று கொண்டு வந்திருக்கிறோம்.

இந்தி மற்றும் பிற எந்த மொழியையும் கற்றுக் கொள்வது மாணவர்களின் விருப்பம்தான். ஒருபோதும் இந்தி கற்றுக் கொள்வது கட்டாயமல்ல. பள்ளிகளில் மராத்தி மட்டுமே கட்டாயம். இந்தி கட்டாயமாக இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

நாங்கள் மராத்தி மொழியின் ஆதரவாளர்கள், அதில் உறுதியாக இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

மகாராஷ்டிரா: “5-ம் வகுப்பு வரை மும்மொழி கட்டாயம்; இந்தி படிப்பது..” – பட்னாவிஸ் சொல்வதென்ன?

தேசியக் கல்விக் கொள்கை மகாராஷ்டிராவில் நடைமுறைக்கு வந்ததை அடுத்து, மும்மொழி கொள்கையில் மூன்றாவதாக ஏதோவொரு மொழியைக் கற்றுக் கொள்ளலாம் என்றிருந்தநிலையில், இந்தி மொழி மட்டுமே பள்ளிகளில் கட்டாயமாக்கப்படுவது சர்ச்சையாகி, பெரும் விவாதப்பொருளாக வெடித்து வந்தது.

மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-வது வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்று மாநில அரசு கடந்த ஏப்ரல் 16-ம் தேதி புதிய அரசாணையும் ஒன்றை வெளியிட்டது.

இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாணவர்களுக்கு இது கூடுதல் சுமையாக இருக்கும் என்று கல்வியாளர்களும் தெரிவித்தனர். 

இதையடுத்து ‘இந்தி விருப்பப் பாடம் மட்டுமே, கட்டாய பாடம் கிடையாது’ என்று மாநில அரசு விளக்கம் அளித்திருந்தது.

இந்நிலையில் மகாராஷ்டிரா பாஜக அமைச்சர் ஆஷிஷ் ஷெலர் இதுபோன்றதொரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *