
சென்னை: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, சென்னை ஜி.என்.செட்டி சாலையில் உள்ள அவரது சிலை, கலைவாணர் அரங்க வளாகத்தில் நிறுவப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகர்கோவில் அடுத்த ஒழுகினசேரியில் சுடலைமுத்துப்பிள்ளை – இசக்கி அம்மாள் தம்பதியருக்கு கடந்த 1908-ம் ஆண்டு மகனாக பிறந்தார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். நாகர்கோவில் சுடலைமுத்துப்பிள்ளை கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கிருஷ்ணன் என்பதாகும்.