
சென்னை: தமிழகத்தில் 35 ஆயிரம் இரண்டாம் நிலை காவலர்களை பாதிக்கும் புதிய பதவி உயர்வு உத்தரவை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: காவல் துறையினருக்கு திமுக அரசு பதவி உயர்வில் மிகப் பெரிய சலுகை அளிப்பதுபோல், கடந்த ஜூன் 13-ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2-ம் நிலைக் காவலர்கள் 23 ஆண்டுகால பணிக்குப் பிறகு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெறுவார்கள் என்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, முதல்நிலைக் காவலராக 5 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்பதை, 3 ஆண்டுகளாகக் குறைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.