
சென்னை: தமிழக அரசுத் துறை செயலர்கள், மாவட்டஆட்சியர்கள் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உயர்கல்வி துறை செயலராக பொ.சங்கர், வணிக வரி, பதிவு துறை செயலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசுப் பணியில் 3 ஆண்டுகள் ஒரே பணியிடத்தில் பணியாற்றுவோர், இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். இது தவிர, சட்டப்பேரவை, மக்களவை தேர்தல் காலங்களிலும் அனைத்து நிலைகளிலும் இடமாற்றங்கள் நிகழும். இந்த நிலையில், தமிழக அரசுத் துறைகளின் செயலர்கள், துறை தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் என 55 ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.