• June 23, 2025
  • NewsEditor
  • 0

மேற்கு வங்காளம் – காளிகஞ்ச், கேரளா – நிலம்பூர், குஜராத் – விசாவதர், குஜராத் – கடி, பஞ்சாப் – லூதியானா மேற்கு உள்ளிட்ட 5 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலுக்கான முடிவுகள் இன்று (ஜூன் 23) வெளியாகின.

பஞ்சாப் – லூதியானா தொகுதியில் ஆம் ஆத்மியின் சஞ்சீவ் அரோரா, குஜராத் – விசாவதர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் கோபால் இத்தாலியா, கேரளா – நிலம்பூரில் காங்கிரஸின் ஆர்யாடன் ஷௌகத், குஜராத் – கடி தொகுதியில் பாஜகவின் ராஜேந்திர சாவ்தா உள்ளிட்டோர் வெற்றிபெற்றுள்ளனர்.

மம்தா பானர்ஜி

மேற்கு வங்கம் கலிகஞ்ச் தொகுதியில் ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸின் அலிஃபா அகமது வெற்றிபெற்றுள்ளார். இந்த வெற்றியைக் கொண்டாட திரிணாமுல் காங்கிரஸினர் கலிகஞ்ச் தொகுதியில் மிகப்பெரிய வெற்றிக் கொண்டாட்ட அணிவகுப்பை நடத்தியிருக்கின்றனர். இதில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பெரும் வெடிகளை பொதுத்தெருக்களில் வெடித்துக் கொண்டாடியிருக்கின்றனர். குறிப்பாக எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் வீட்டின் அருகே இந்த வெடிகளை வெடித்து ஆரவாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

திரிணாமுல் காங்கிரஸின் இந்த ஆபத்து மிகுந்த ஆரவாரக் குண்டுவெடிப்புக் கொண்டாட்டத்தில் சிக்கி தமன்னா காதுன் என்ற சிறுமி படுகாயமடைந்து உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “கிருஷ்ணாநகர் காவல் மாவட்டத்தில் உள்ள பரோசந்த்கரில் நடந்த குண்டுவெடிப்பில் சிறுமி இறந்தது அதிர்ச்சியையும் ஆழ்ந்த வருத்தத்தையும் அளித்துள்ளது.

துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினருடன் எனது ஆழ்ந்த இரங்களையும், அந்தச் சிறுமிக்காகவும், அவரின் குடும்பத்திற்காகவும் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இந்தச் துயரச் சம்பவத்திற்கு திரிணாமுல் காங்கிரஸும், முதல்வர் மம்தா பானர்ஜியும் பொறுப்பேற்று, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர். சிறுமியின் இறப்பிற்கான காரணத்தை உறுதிபடுத்த காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *