• June 23, 2025
  • NewsEditor
  • 0

ஈரானில் உள்ள அணு சக்தி மையங்களைத் தாக்க அமெரிக்க ராணுவம் நடத்திய ஆப்பரேஷன் மிட் நைட் ஹேமரில் இந்தியாவின் வான் பரப்புப் பயன்படுத்தியாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வைரலான நிலையில், அது பொய் என PIB -யின் உண்மை சரிபார்ப்பு மையம் கூறியுள்ளது.

“அமெரிக்காவின் மிட் நைட் ஹேமர் ஆபரேஷனுக்கு இந்திய வான் பரப்பு பயன்படுத்தப்படவில்லை” எனத் தெரிவுபடுத்தியுள்ளது.

இதற்காக அமெரிக்க கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் டான் கெய்னின் செய்தியாளர் சந்திப்பை மேற்கோள்காட்டியுள்ளனர்.

அவர், “ஆபரேஷன் மிட் நைட் ஹேமரின்போது ஈரானைத் தாக்க இந்திய வான் வழி பயன்படுத்தப்பட்டதாக சில சமூக ஊடகக் கணக்குகள் கூறுகின்றன. இது பொய்யான செய்தி. இந்திய வான்வழியை அமெரிக்கா பயன்படுத்தவில்லை.” எனக் கூறியதாக PIB தெரிவித்துள்ளது.

மேலும் ஜெனரல் கெய்ன் ஆபரேஷன் மிட் நைட் ஹேமரின்போது எந்தெந்த நேரத்தில் எந்தெந்த வழித்தடங்கள் பயன்படுத்தப்பட்ட என்பதை பெண்டகனில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கியுள்ளார். அதில் எந்த அமெரிக்க போர் விமானமும் இந்திய பரப்பைப் பயன்படுத்தவில்லை என்பதைக் காணலாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *