• June 23, 2025
  • NewsEditor
  • 0

புதுச்சேரி: புகையிலை இல்லா இளைஞர் நலன் இயக்கம் 2.0-ஐ சிறப்பாக செயல்படுத்தியதற்காக புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் விருது வழங்கியுள்ளது.

இந்த விருதை பெற்ற புதுச்சேரி அரசு – சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்ட அதிகாரி டாக்டர் கோவிந்த ராஜன், திட்டத்தின் மாநில முதன்மை அதிகாரி டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து விருது மற்றும் சான்றிதழைக் காண்பித்து இன்று வாழ்த்துப் பெற்றனர். அப்போது சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், சட்டப்பேரவை துணைத் தலைவர் ராஜவேலு ஆகியோர் உடன் இருந்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *