• June 23, 2025
  • NewsEditor
  • 0

சிவகாசி: “மதுரையில் நேற்று நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் முன்னாள் முதல்வர் அண்ணாவை விமர்சித்தது வருத்தமளிக்கிறது. அதைத் தவிர்த்து இருக்கலாம்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “மதுரையில் நடைபெற்றதுதான் உண்மையான முருக பக்தர்கள் மாநாடு. ஆட்சியாளர்கள் அனைத்து மத பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். இந்துமத நம்பிக்கைகள் கொண்டவர்களை புண்படுத்துவதுதான் திமுக வரலாறு. குனிந்தவன் நிமிர்ந்தால் எதிரி காணாமல் போய்விடுவான்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *