• June 23, 2025
  • NewsEditor
  • 0

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது.

ind vs eng

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பந்துவீசிய போது பும்ராவின் பந்துவீச்சில் பல கேட்ச்களை இந்திய வீரர்கள் ட்ராப் செய்தனர். ஜெய்ஸ்வால் மட்டும் பும்ராவின் பந்தில் 3 கேட்ச்களை ட்ராப் செய்தார்.

இந்நிலையில் நேற்றைய நாளுக்குப் பிறகு ட்ராப் ஆன கேட்ச்களை பற்றி பேசியிருக்கும் அவர், “கேட்ச்களை தவறவிட்ட அந்த நொடியில் ஏமாற்றமாகத்தான் இருந்தது. இருப்பினும் இது விளையாட்டின் ஒரு பகுதிதான். ட்ராப் ஆன கேட்ச்களையே நினைத்து அழுதுகொண்டிருக்க முடியாது.

பும்ரா
பும்ரா

களத்தில் நிறைய புதிய வீரர்கள் இருந்தனர். அவர்களிடம் என்னுடைய எமோஷனை காண்பித்து, அவர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்க விரும்பவில்லை. யாரும் இங்கே எதையும் வேண்டுமென்றே செய்யவில்லை. புதியவர்கள் அனுபவத்தில் அனைத்தையும் கற்றுக்கொள்வர்” என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *