
புதுடெல்லி: அயோத்தியைப் போல் பிஹாரின் சீதாமடியில் சீதைக்கு பிரம்மாண்டமாகக் கோயில் கட்டப்பட உள்ளது. இதன் புதிய வடிவமைப்பை முதல்வர் நிதிஷ்குமார் பார்வையிட்டுள்ளார்.
பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி அரசு ஆட்சியில் உள்ளது. இங்குள்ள சீதாமடியின் புனவுரா எனும் கிராமத்தில் சீதைக்காக ஒரு பழைய கோயில் உள்ளது. புனவுரா தாம் எனப்படும் இக்கோயில் உள்ள இடத்தில், சீதை பிறந்ததாகக் கருதப்படுகிறது. இந்த கோயிலின் மேம்பாட்டுக்காக கடந்த ஆண்டு நவம்பரில் பிஹார் அரசு சுமார் 50 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி ஒதுக்கியது.