
சமீபத்திய பேட்டியொன்றில் இந்தி திரையுலகினை கடுமையாக சாடியிருக்கிறார் ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண்.
ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹரி ஹர வீர மல்லு’. வரும் ஜூலை 24-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ட்ரெய்லர் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தினை விளம்பரப்படுத்தும் விதமாக பவன் கல்யாண் பேட்டியொன்று அளித்திருக்கிறார்.