• June 23, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.488 கோடியில் குழந்தைகளுக்கான பிரத்யேக பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட உள்ளது. கட்டுமான பணியை முதல்வர் ஸ்டாலின் செப்டம்பர் மாதம் தொடங்கி வைக்க உள்ளார் என்று சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.487.66 கோடியில் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட உள்ளது. இதற்கான இடம் தேர்வு மற்றும் கட்டுமான பணிகள் குறித்து சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *