
ஈரோடு: துரை வைகோவுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி தருவது தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கடவுளின் பெயரால் ஒரு கட்சி மாநாடு நடத்துவது தவறானது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள், கடவுள் பெயரால் மாநாடு நடத்தியது இல்லை. முருகன் மாநாட்டுக்குப் பின்னால், பாஜக, ஆர்எஸ்எஸ், இந்துத்துவா சக்திகள் உள்ளன. இந்த மாநாடு மூலம் இந்து வாக்கு வங்கியை உருவாக்க முடியாது.