
மதுரை: இந்துக்களை ஒருங்கிணைத்துள்ளது மதுரை முருக பக்தர்கள் மாநாடு என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அவர் பேசியதாவது: நமது வாழ்வியல் முறைக்குத் தொடர்ந்து இடையூறு வருகிறது. அதை எதிர்ப்போம். இதற்காகவே மதுரையில் இந்த மாநாடு நடக்கிறது. நமது வாக்கைப் பெற்று அதிகாரத்தில் இருப்போர், கோயில்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கின்றனர். முதல் படை வீடான திருப்பரங்குன்றத்துக்கே இடையூறு செய்தனர். அடுத்தடுத்த வீடுகளுக்கும் இடையூறு செய்வர்கள். நமது முன்னோர் பாதுகாத்துக் கொடுத்துள்ளதை நாம் பாதுகாக்க வேண்டும்.