
மதுரை: இந்து சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என ஆர்எஸ்எஸ் தென் பாரதத் தலைவர் வன்னியராஜன் தெரிவித்தார்.
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அவர் பேசியதாவது: இந்து சமுதாய மனப்பான்மையில் மாற்றம் கொண்டுவரக் கூடிய மாநாடு இது. கூட்டு முயற்சியால் இம்மாநாடு வெற்றி பெற்றுள்ளது. பெரிய எண்ணிக்கையில் திரண்டுள்ளோம். இதன் மூலம் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.