
சென்னை: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வரலாற்றில் காலம் கடந்து நிலைத்து நிற்கும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைகளில் பங்களிப்பாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு ஆளுநர் மாளிகை சார்பில் பாராட்டு விழா சென்னை தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் நேற்று நடத்தப்பட்டது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட முப்படைகள் பயன்படுத்தும் ஆயுதங்களின் மாதிரிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து தென்னிந்தியப் பகுதிகளின் ராணுவ லெப்டினட் ஜென்ரல் கரண்பீர் சிங் பரார், இந்திய விமான படை ஆவடி மையத்தின் கமான்டர் பிரதீப் சர்மா, இந்திய கடலோர காவல்படை கிழக்கு மண்டலத்தின் கமான்டர் தர்விந்தர் சிங் சைனி உட்பட 10 பேருக்கு ஆளுநர் ரவி விருதுகள் வழங்கி பாராட்டினார்.