
ராமநாதபுரம்: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் 54 படகு உரிமையாளர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ 3.96 கோடி நிவாரண உதவித் தொகையினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கினார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மீனவர்களுக்கு முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்.