• June 22, 2025
  • NewsEditor
  • 0

தேர்தலில் கேட்கும் தொகுதிகள் கிடைக்காவிட்டால் திமுக கூட்டணியை விட்டு செல்ல மாட்டோம். அதே நேரத்தில் குறைந்தபட்ச சுய மரியாதை யை எதிர்பார்ப்போம் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி தெரிவித்தார்.

திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ஈரோட்டில் ஜூன் 22-ம் தேதி(இன்று) நடைபெறும் மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் மண்டல ரீதியாக செயல் வீரர்கள் கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை பொதுச் செயலாளர் வைகோ வெளியிடுகிறார். பட்டம், பதவிகளு க்கு அப்பாற்பட்டு செயல்படுபவர்கள் மதிமுகவினர். நான் மத்திய அமைச்சராகும் சூழல் தற்போது இல்லை. எதிர்காலம் குறித்து தற்போது எதுவும் கூற முடியாது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *