
சென்னை: “எது ஆன்மிகம், எது அரசியல் என்பதை ஆண்டவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான். அவர்கள் நடத்துகின்ற இன்றைய மாநாடு முழுக்க முழுக்க அரசியல் மாநாடு,” என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை அயனாவரம், காசி விஸ்வநாதர் கோயிலில் பொதுநல நிதி மற்றும் திருக்கோயில் நிதி மூலம் ரூ.97 லட்சம் மதிப்பீட்டில் குளத்தை சீரமைக்கும் பணிகளை இன்று (ஜூன் 22) தொடங்கி வைத்தார்.