• June 22, 2025
  • NewsEditor
  • 0

மதிமுக-வின் 31-வது பொதுக்குழுக் கூட்டம் இன்று ஈரோட்டிலுள்ள பரிமளம் ஹாலில் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., பொருளாளர் மு. செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சி.ஏ. சத்யா, செஞ்சி ஏ.கே. மணி, ஆடுதுறை இரா. முருகன், தி.மு. இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பலரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

வைகோ

இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களையும் நிறைவேற்றியிருக்கிறது மதிமுக.

2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட்டுத் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மறுமலர்ச்சி திமுக உதயமானதிலிருந்து 1996, 2001, 2006, 2016, 2021 ஆகிய ஐந்து சட்டமன்றத் தேர்தல்களிலும், 1996, 1998, 1999, 2004, 2009, 2014, 2019, 2024 ஆகிய எட்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் களம் கண்டிருக்கிறது.

மதிமுக - வைகோ
மதிமுக – வைகோ

1997-ஆம் ஆண்டு முதல் 2010 வரையில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் திகழ்ந்தது. எனவே, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கழகம் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு ஏதுவாக கூடுதல் தொகுதிகளைக் கூட்டணியில் பெற்றுப் போட்டியிட வேண்டும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *