• June 22, 2025
  • NewsEditor
  • 0

பாட்னா: ​மு​தி​யோர், மாற்​றுத் திற​னாளி​கள் உட்பட குறிப்​பிட்ட பிரி​வினருக்​கான மாதாந்​திர உதவித் தொகையை ரூ.400-ல் இருந்து ரூ.1,100 ஆக உயர்த்தி பிஹார் முதல்​வர் நிதிஷ்கு​மார் அறி​வித்​துள்​ளார்.

பிஹார் மாநிலத்​தில் வரும் அக்​டோபர் அல்​லது நவம்​பர் மாதங்​களில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில், கடந்த வெள்​ளிக்​கிழமை பிஹார் மாநிலத்​தில் ரூ.5,736 கோடி மதிப்​பிலான நலத்​திட்​டங்​களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்​தார். பிரம்​மாண்​ட​மான பொதுக் கூட்​டத்​தில் அவர் பேசும்​போது, ‘‘காங்​கிரஸ் – ஆர்​ஜேடி கூட்​ட​ணி​யின் காட்​டாட்சி நடத்​தி​ய​வர்​களிடம் இருந்து மீட்​கப்​பட்​ட​தால் பிஹார் மாநிலம் வளர்ச்​சிப் பாதையை நோக்கி செல்​கிறது. முதல்​வர் நிதிஷ்கு​மார் சிறந்த பணி​களை மேற்​கொண்டு வரு​கிறார். இந்​தியா உலகின் 3-வது மிகப்​பெரிய பொருளா​தார நாடாக மாறு​வதற்கு நடை​போடு​கிறது. அதற்கு பிஹார் மாநிலத்​தின் பங்​களிப்பு மிகப்​பெரி​தாக இருக்​கும்’’ என்று பாராட்​டி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *