• June 22, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: சத்​தீஸ்​கரின் கங்​கேர் மாவட்​டம் அமதோலா கல்​பார் எனும் மலைப்​பாங்​கான வனப்​பகு​தி​யில் நக்​சலைட்​டு​கள் நடமாட்​டம் இருப்​ப​தாக நேற்​று​முன்​தினம் தகவல் கிடைத்​துள்​ளது. உடனடி​யாக அங்கு சிஆர்​பிஎப் வீரர்​கள் விரைந்து சென்​றனர். அப்​போது, பாது​காப்​புப் படை​யினரை நோக்கி நக்​சலைட்​டு​கள் துப்​பாக்​கிச் சூடு நடத்​தினர். அப்​போது வீரர்​கள் பதில் தாக்​குதல் நடத்​தி​ய​தில், பிஎல்​ஜிஏ​வின் பெண் நக்​சலைட் சாந்தி என்ற தேவ் உயி​ரிழந்​தார். இவரை பற்றி தகவல் அளிப்​பவர்​களுக்கு ரூ.8 லட்​சம் சன்​மானம் அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

இதுகுறித்து எஸ்​.பி. இந்​திரா கல்​யாண் எலிசேலா கூறுகை​யில், ‘‘மாவட்ட ரிசர்வ் படை மற்​றும் எல்​லைப் பாது​காப்பு படை​யினரின் நம்​பக​மான தகவலைப் பெற்ற பிறகு, கூட்டு பாது​காப்​புப் படையினர் முற்​றுகை​யிட்​டனர். அப்​போது நடந்த என்​க​வுன்ட்​டரில் பிஜப்​பூர் மாவட்​டம் குண்​டேமில் வசித்த சாந்தி என்ற தேவ் என்​பவரும் உயி​ரிழந்​தார். இவர் கரி​யாபந்த் மாவட்​டத்​தின் நக்​சலைட்​டு​களின் கோப்ரா குழு​வில் மிக முக்​கிய​மானவ​ராக இருந்​தவர்’’ என்​றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *