
இஸ்ரேல்- ஈரான் இடையே போர் நடைபெற்று வரும் சூழலில் அந்நாடுகளில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தர்கள் பாதுகாப்பாக மாநிலம் திரும்ப முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்காக 24 மணி நேரம் இயங்கக்கூடிய பிரத்யேக கட்டுப்பாட்டு அறை டெல்லியில் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இஸ்ரேல்- ஈரான் இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக அந்நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையை அங்குள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று உடனடியாக அவர்களுக்கு உடனடியாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.