
புதிய விரிவான மினி பேருந்து திட்டம் மூலம் பேருந்து வசதி கிடைக்காத 90 ஆயிரம் கிராமங்களில் வசிக்கும் 1 கோடி மக்கள் பயனடைந்துள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பேருந்து வசதி கிடைக்காத குக்கிராமப் பகுதி மக்களுக்கும் பேருந்து வசதி கிடைக்கும் வகையில் 1997-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் மினி பேருந்து திட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே, கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விரிவான மினி பேருந்து திட்டத்தின்படி, 25 கிமீ தூரத்துக்கு மினி பேருந்து இயக்கப்படும் என்றும், முக்கிய அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்குச் சென்று பொதுமக்களை இறக்கிவிட ஏதுவாக மேலும் 1 கிமீ தூரம் வரை மினி பேருந்துகளை இயக்க வழிவகை செய்யப்பட்டது.