• June 21, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: “ஒரு காலத்தில் சமஸ்கிருதம் இருந்ததைப் போலவே, இப்போது அவர்கள் ஆங்கிலத்தை மக்களுக்கு எட்டாமல் வைத்திருக்க விரும்புகிறார்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பயம் ஆங்கிலம் பற்றியது அல்ல, அது சமத்துவம் மற்றும் வளர்ச்சி பற்றியது,” என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஆங்கிலம் இனி ஒரு காலனித்துவ நினைவுச்சின்னம் அல்ல – அது முன்னேற்றத்திற்கான உலகளாவிய கருவி. சீனா, ஜப்பான், கொரியா, இஸ்ரேல் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் அதை ஒரு காலனித்துவ தொந்தரவாக அல்ல, மாறாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத்தில் முன்னிலை வகிப்பதற்காக கற்பிக்கின்றன. வலுவான தேசிய பெருமையுடன் கூடிய சீனா கூட, ஆங்கிலத்தை வளர்ச்சிக்கு அவசியமானதாகக் கருதுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *