
திருநெல்வேலி: ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு கூறியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவர்கள் ஈரான் நாட்டில் மீன்பிடி தொழிலுக்கு சென்றுள்ளனர். தற்போது அங்க போர் நடைபெற்று வரும் நிலையில் அந்த மீனவர்களை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.