
சென்னை: டாஸ்மாக் முறைகேடு தொடர்பான விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக கூறி திரைப்பட தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வீடு, அலுவலகங்களுக்கு சீல் வைத்தனர்.
அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை ஏற்கெனவே நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.