
சென்னை: கீழடியை வைத்து திமுக அரசு அரசியல் செய்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கீழடியில் அகழ்வாராய்ச்சி செய்த இயக்கம் அதிமுக. கீழடியை வைத்து அரசியல் செய்யும் இயக்கம் திமுக. கீழடிக்கு ஒரு பைசா கூட செலவு செய்யாத ஆட்சி திமுக ஆட்சி. கீழடி விவகாரம் வந்த பிறகு அகழ்வாய்வு துறை தொடங்கியது போன்று திமுக கட்டமைக்கிறது.